எந்த  உயிரினமும் தன் வாழ்க்கை முறையை தன் வாழ்விடத்தை தானே  அழித்துக்கொள்வதில்லை மனிதன் மட்டும்தான் அழித்து கொண்டே இருக்கிறான்  இயற்கை எவ்வளவுதான் தாக்குபிடித்து ஈடுகொடுக்கும் ?
           "இனிமேல் மனிதன் அறிவுபெற இயற்கையிடம்தான் திரும்பவேண்டும் என்றார் தாமஸ்  பெயின். ஆம் ! இயற்கையின் ஆற்றல் மிகு விதிகளை மாற்ற முயற்சிப்பது  வெற்றியைத்தராது என்பது இப்போதுள்ள சூழல் மக்களுக்கும், ஆட்சியாளர்களுக்கு  புரிந்திருக்க வேண்டும். புரிந்து கொள்ளவில்லை என்றால், புரிந்து  கொள்ளாதவர்களின் செயல்பாட்டால்-இயற்கை அழிப்பு தீவிரவாதத்தால்  (பயோடெரரிசம்) உலகமக்கள் வதைபட வேண்டுமா என்ன.
           மக்களே (இளைஞர்களே) உங்கள் பகுதியில் இன்றுமுதல் நெகிழித்தால்  (பிளாஸ்டிக்) பயன்பாட்டை தவிர்ப்போம், வீட்டில் இருந்து வெளியேற்றப்படும்  குப்பைகளை, மக்கும் குப்பை-மக்காத குப்பை என தரம்பிரித்து வெளியோற்றுவோம்  நகராட்சி, மாநகராட்சி ஊழிர்களுக்கு உதவி செய்வோம், ஊக்கப்படுத்துவோம். 
-பசுமை நாயகன்
 
